Monday, May 21, 2012

வாழையடி வாழை!


(நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

ஒருவரோடு ஒருவராய் வாழுங்கள்
ஒருவருக்கு ஒருவராய் வாழுங்கள் .. ஆனால்
அவரவரின் தனித்தன்மைகளோடு !

வலது, இடது கைகளே கை கோர்த்து
நடக்க அனுமதிக்கும் ஒரே திசையில்.
வலதும்,வலதும் .. இடதும்,இடதும் அல்ல!
வேறுபாடுகளை அனுமதியுங்கள்
மன வேறுபாடு ஏதுமில்லாமல்!

மாலைச் சூரியன் அள்ளி வீசும்
மஞ்சள் ஒளியே _ மகரந்தத் தூளாய்
காலைத் தாமரைக்குள் மறைந்திருப்பது போல‌
ஒருவர் மனதை ஒருவர் அறிந்தேயிருங்கள்
மறைவாக மனதிற்குள்!

தாகங்கொண்ட மானிரண்டு
நீர் அருந்தியும் தீர்ந்து போகாத நீர்க்குட்டை
கதை போன்று _ விட்டுக் கொடுங்கள்
உங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போதும்!

அது சரி, இந்த கவிதைத் தாள்
காணாமல் போய்விட்டால்..?
கவலையை விடுங்கள்,
காதலோடு வாழுங்கள் காலம், காலமாய்...


[குறிப்பு : வலது, இடது கைகள் பற்றிய வரிகள் குறுஞ்செய்தியில் படித்தேன். இந்த வரிகளுக்குப் பொருத்தமாய் இருந்ததால் இங்கு பயன்படுத்திக் கொண்டேன்.)

( நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... அருமை...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

அப்துல் காதர் said...

தோழர் சிவஹரி வழங்கிய லீப்ஸ்டர் விருதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

காண்க: http://anbummanidhamum.blogspot.in/2012/09/blog-post_16.html

இரா.அன்புராஜா said...

என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!
உங்கள் வலை தளத்தினை சென்று பார்த்தேன். டி டி மிக்ஸ் மிக அருமை தனபாலன்.