அரசு அறிவிப்பு 1:
"மின்சார வெட்டு
குறைந்தபட்சம்
நகரங்களில் 2 மணி நேரம்
கிராமங்களில் 6 மணி நேரம்"
மக்களின் சமாதானம்:
" நல்ல வேளை,
மெழுகுவர்த்தியும்
கொசுவர்த்தியும்
விலையேறவில்லை
மற்றபடி மேட்ச் தான் பார்க்க முடியாது"
அரசு அறிவிப்பு 2:
" மளிகைப் பொருள்களின்
விலை உயர்வு"
மக்களின் சமாதானம்:
"கிலோ அரிசி ரூ.1/ தான்"
அரசு அறிவிப்பு 3:
பெட்ரோல் விலை உயர்வு
மக்களின் சமாதானம்:
டீசல் விலை உயரவில்லை
செய்தி :
"கோடிகளில் நஷ்டம்;
வரலாறு காணாத ஊழல்"
மக்களின் சமாதானம்:
"யார் தான் செய்யவில்லை"
செய்தி:
" ஓட்டுக்கு இனி காசு இல்லை"
சொன்னவனின் சட்டையைப் பிடித்து
ஓங்கிக் கேட்டான்,
இனமானத் தமிழன்
பகுத்தறிவுப் பகலவனின் வாரிசு
"ஏன்?" என்று
No comments:
Post a Comment