Friday, October 5, 2012

உறங்கா இரவுகள்!

நீ உறங்கா இரவுகளில்
உன்னை என் தோள்சாய்த்து
உனக்கு படித்துக் காட்டவே,

உன் நினைவுகளால்
நீண்ட என் இரவுகளில்
எழுதிவைக்கின்றேன்,

ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
உனக்கான என் கதைகளை..!

கனவுகளில் உன்னோடு
பேசியவைகளையே
கவிதைகளாக்கி வைத்திருக்கிறேன்
நான் உறங்கிய இரவுகளில்..!

இப்பொழுது புரிகிறதா,
எண்ணிக்கையில்
என் கவிதைகளைவிட‌
நட்சத்திரங்கள்
அதிகமாய் இருப்பதன் காரணம்..?

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைத்தது வரிகள்...

முடிவில் அருமை...

இரா.அன்புராஜா said...

மிக்க நன்றி தனபாலன் தங்களின் வருகைக்கும், தருகைக்கும்!

இரா.அன்புராஜா said...

மிக்க நன்றி! தங்களின் வலைதளமான ஜோஸபின் கதைக்கிறேன் மிக நன்றாக உள்ளது. மற்றும் உங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் மிக அருமை