Friday, October 5, 2012

தங்கை நிலா!

ஞாபகமிருக்கின்றதா?

மழை ஓய்ந்த மாலை வேளையில்
சாலையோரமாய் சென்றுகொண்டிருந்தோம்.

சட்டென்று நான் நிற்கவும்,
"என்ன ணா?" என்றாய்,

சாரல் ஒரு ரகசியம் சொல்லியது என்றேன்!
"என்ன ணா அது?" என்றாய்,

சற்று முன்
நீ உலுக்கிய மரக்கிளையில் இருந்துமட்டும்
'பன்னீர் துளிகள் கொட்டியதாம்' என்றேன்.

அன்று முதல்தான் நீ என் கவிதைகளின்
முதல் ரசிகை ஆனாய்!!

No comments: