அறிவேன் தோழி,
நான் ஒரு தீக்குச்சி சூரியன் என்று!
என்னுள் இருக்கும் வெப்பமும்
எனக்கு தெரியும்!
பற்றி எரிய எனக்கு
பாஸ்பரஸ் தேவையில்லை,
பரஸ்பரம் பேசி கொள்ள
உன் நட்பு போதும்!
மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்ட
ஆலமர விதை நான்!
என்க்கு நட்பு என்னும் நீரூற்றி
அக்கறை எனும் வேலி கட்டுகிறாய்.
நிச்சயம் ஒரு நாள்- நான்
விழுதுகள் இறக்கி விருட்சமாவேன்!
அப்போது இந்த உலகிற்கு சொல்வேன்
இந்த மரத்தின் வேர் - நீ என்று!!
'சிங்கம், தான் ஒரு சிங்கம் என்று
உணராதவரை ஒருபோதும்
கர்ஜிக்கமுடியாது!!'
இப்போது புரிகிறது
உனது தன்னம்பிக்கை போதனை.
இனி நான் இந்த உலகை வெல்வேன் அதை
விரைவில் உனக்கு சொல்வேன்!!
No comments:
Post a Comment