Tuesday, October 5, 2010

ஊஞ்சல் !

மழை ஓய்ந்த - ஓர்
மார்கழி மாதத்து மாலை நேரம்

மழைப் பாட்டை பாடியபடி,
சுற்றி அமர்ந்து
பனிக்காற்று
குளிர் காய்ந்து கொண்டிருந்த ஒரு
தெரு விளக்கின் கீழ்
நடந்து கொண்டிருந்தோம்!

'ரொம்ப குளிருதுல்ல..' என்றாய்,
இரண்டு கைகளையும்
குறுக்கியபடி.

சட்டென்று கூக்குரல்
ஒன்று கேட்டது..

அது வேறொன்றுமில்லை
இவ்வளவு நேரமாய் - நீ
கைகளை வீசி
நடந்து கொண்டிருந்ததால்,
உன் கையின் நிழலை
ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்த
என் கைநிழல் - சட்டென்று
உன் கைநிழல் காணாமல் போய்விட்டதால்
எழுப்பிய கூக்குரல்தான் அது
என்று தெரிந்ததும்

அதை சமாதானப்படுத்த - நீ
உன் கை நிழலின் மடியில்
அமரவைத்தாய்
என் கையின் நிழலை!!

No comments: