Tuesday, October 5, 2010

அறிந்ததும் அறியாததும் !

வெறும் காகிதப் பூக்கள்
என் கவிதைகள்!

உன் உதடுகளால்
உச்சரிக்கப்படும் போது
அவை வாசம் மட்டும் பெறுவதில்லை
சுவாசமும் பெறுகின்றன!!

கூட்டுப் புழுக்களாய் – என்
நோட்டுப் புத்தகத்தில்
உறங்கிக் கிடந்த
வார்த்தைகள் யாவும்
நீ வாசித்து போன பின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
பறக்கத் தொடங்கின
என் அறை முழுவதும்!!

கால் பட்டதால்
கல்லொன்று
உருப் பெற்ற கதை நானறிவேன்! – உன்
கண் பட்டதால்
சொல்லொன்று
உயிர் பெற்றதை அன்று முதலே அறிந்தேன்!!

No comments: